ராணா படம், கானா படம் எதிலிருந்து நீக்கினாலும் கவலைப்படப்போவதில்லை என்று கூறிய நடிகர் வடிவேலு, மே 13ஆம் தேதிக்கு பிறகு எல்லாம் மாறும் என்றார்.
முதலமைச்சர் கருணாநிதியை கோபாலபுரத்தில் உள்ள வீட்டில் இன்று நடிகைக்சுவை நடிகர் வடிவேலு சந்தித்து பேசினார். சுமார் ஒரு மணி நேரம் சந்தித்துப் பேசினார். அப்போது மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உடன் இருந்தார்.
இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வடிவேலு, ஒரு தனியார் தொலைக் காட்சி வாக்குப்பதிவுக்கு பிறகு நடத்திய கருத்துக் கணிப்பில் தி.மு.க. கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று இப்போது கூறி இருக்கிறது. அந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதற்காக முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்தேன். அவரும் மகிழ்ச்சி அடைந்தார்.
கிராமப்புற மக்களுக்கு 108 ஆம்புலன்ஸ், கலைஞர் காப்பீட்டு திட்டம் போன்ற பல்வேறு நலத்திட்டங்கள் சென்று சேர்ந்து இருக்கிறது. நான் பிரசாரம் செய்த போது மக்களிடம் இருந்த எழுச்சியில் இது தெரிந்தது. எனவே, தி.மு.க. கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. இதை யாரும் தடுக்க முடியாது என்று வடிவேலு கூறினார்.
பின்னர் செய்தியாளர்கள், எத்தனை தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் என்று கேள்விக்கு பதில் அளித்த வடிவேலு, தொலைக்காட்சி கருத்துக்கணிப்பின்படி, 130 இடங்களில் மட்டுமல்ல, 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றார்.
''1971இல் தி.மு.க. ஆட்சிக்கு வராது என்றார்கள். ஆனால் 184 இடங்களில் வெற்றி பெற்று தி.மு.க. ஆட்சியை பிடித்தது. அது போல இப்போதும் அதிக இடங்களில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். இந்த ஆட்சி மூலம் பயன் அடைந்த ஏழை எளிய மக்களால் மிகப் பெரிய மகிழ்ச்சி கிடைக்கும்'' என்று வடிவேலு கூறினார்.
விஜயகாந்தை தாக்கி பிரசாரம் செய்ததால் ராணா படத்தில் இருந்து நீங்கள் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறதே என்று கேள்விக்கு, 'ராணா' படம் 'கானா' படம் எதில் இருந்து நீக்கினாலும் நான் கவலைப்படவில்லை. மே 13ஆம் தேதி மக்கள் ஆதரவு யாருக்கு என்பது தெரியும். அதன் பிறகு எல்லாம் மாறும் என்றார் வடிவேலு.
அ.இ.அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி வைத்ததுதான் அதற்கு பின்னடைவு என்று கூறுகின்றீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த வடிவேலு, பொறுத்து இருந்து பாருங்கள். கருணாநிதியிடம் தோற்பதற்கு காத்திருப்பவர்கள் எத்தனை பேர் என்பது அப்போது தெரியும் என்றார்.
முதலமைச்சர் கருணாநிதியை கோபாலபுரத்தில் உள்ள வீட்டில் இன்று நடிகைக்சுவை நடிகர் வடிவேலு சந்தித்து பேசினார். சுமார் ஒரு மணி நேரம் சந்தித்துப் பேசினார். அப்போது மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உடன் இருந்தார்.
இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வடிவேலு, ஒரு தனியார் தொலைக் காட்சி வாக்குப்பதிவுக்கு பிறகு நடத்திய கருத்துக் கணிப்பில் தி.மு.க. கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று இப்போது கூறி இருக்கிறது. அந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதற்காக முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்தேன். அவரும் மகிழ்ச்சி அடைந்தார்.
கிராமப்புற மக்களுக்கு 108 ஆம்புலன்ஸ், கலைஞர் காப்பீட்டு திட்டம் போன்ற பல்வேறு நலத்திட்டங்கள் சென்று சேர்ந்து இருக்கிறது. நான் பிரசாரம் செய்த போது மக்களிடம் இருந்த எழுச்சியில் இது தெரிந்தது. எனவே, தி.மு.க. கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. இதை யாரும் தடுக்க முடியாது என்று வடிவேலு கூறினார்.
பின்னர் செய்தியாளர்கள், எத்தனை தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் என்று கேள்விக்கு பதில் அளித்த வடிவேலு, தொலைக்காட்சி கருத்துக்கணிப்பின்படி, 130 இடங்களில் மட்டுமல்ல, 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றார்.
''1971இல் தி.மு.க. ஆட்சிக்கு வராது என்றார்கள். ஆனால் 184 இடங்களில் வெற்றி பெற்று தி.மு.க. ஆட்சியை பிடித்தது. அது போல இப்போதும் அதிக இடங்களில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். இந்த ஆட்சி மூலம் பயன் அடைந்த ஏழை எளிய மக்களால் மிகப் பெரிய மகிழ்ச்சி கிடைக்கும்'' என்று வடிவேலு கூறினார்.
விஜயகாந்தை தாக்கி பிரசாரம் செய்ததால் ராணா படத்தில் இருந்து நீங்கள் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறதே என்று கேள்விக்கு, 'ராணா' படம் 'கானா' படம் எதில் இருந்து நீக்கினாலும் நான் கவலைப்படவில்லை. மே 13ஆம் தேதி மக்கள் ஆதரவு யாருக்கு என்பது தெரியும். அதன் பிறகு எல்லாம் மாறும் என்றார் வடிவேலு.
அ.இ.அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி வைத்ததுதான் அதற்கு பின்னடைவு என்று கூறுகின்றீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த வடிவேலு, பொறுத்து இருந்து பாருங்கள். கருணாநிதியிடம் தோற்பதற்கு காத்திருப்பவர்கள் எத்தனை பேர் என்பது அப்போது தெரியும் என்றார்.
1 comment:
This .... (Vadivelu - can fill any bad word) thinks that all tamil people would have voted for DMK by his canvas. Even a single vote would have not be polled by hearing his voice. He is here 2day only coz of cinema. Now he speaking like this. Nanri ketta dog...
Post a Comment